|
Thursday, May 18, 2023
Wednesday, May 17, 2023
( இது, ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு, யாழ்ப்பாணம் கல்வியங்காடு சட்டநாதர் ஆலய முன்றிலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில்,-எனதூரான நாயன்மார்கட்டைச் சேர்ந்த, பிரபல எழுத்தாளரும் கவிஞருமான ´சொக்கன் ஆசிரியர்` அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் யான் வாசித்தளித்த கவிதை)
நான் வேலைசெய்த நிறுவனம், காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்டு, வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்தேன் என்பதுடன் முடிந்ததல்லவா முதற்பாகம்?
இனி என்ன செய்யப்போகிறேன் என்று, அடுத்த தலைப்பில் சொல்கிறேன் என்றுதானே சொன்னேன்?
அடுத்த தலைப்பு ´வெளிநாட்டுப் பயணம்` என்பதைத்தவிர, வேறெதுவாக இருக்கமுடியும்?
ஆனாலும், இந்த வெளிநாடு செல்லும் எண்ணம், உடனடியாக எனக்கு ஏற்படவேயில்லை.
அஃதொரு விபத்தாகவே என்வாழ்க்கையில் குறுக்கிட்டது.
மீண்டும், அந்த நிறுவனம் புதுப்பிக்கப்பட்டு, அங்கேயே தொடர்ந்து பணிசெய்யவே என்மனம் விரும்பியது.
ஏறத்தாழ ஒரிருமாதங்கள்வரை, எவ்விதமான வருமானமும் இல்லாமலே எனது வாழ்க்கை தொடர்ந்தது..
ஏதோ ´கடனை உடனை..` என்பதுபோலக் காலம் நகர்ந்தது என்று வைத்துக்கொள்ளுங்களேன்.
யாழ்.நகரின் நிலைமை சீராகிவிட்டது என்று அறிந்ததும், முதல்வேலையாக, யாழ்.ஐக்கியவியாபாரச் சங்கக் கட்டடம் இருந்த இடத்தைநோக்கி ஆவலுடன் போனேன். அங்கே ஏமாற்றம்தான் எனக்கு மிஞ்சியது.
முற்றுமுழுதாக எரிந்தநிலையில், வெளிச்சுவர்கள் மட்டுமே, அதுகூட அரைகுறையாக நின்றதைக் கண்டு, மனம் சங்கடப்பட்டது.
அதன்கதைதான் முடிந்துவிட்டது; மெயின்ஸ்ரோர்ஸ் ஆவது இயங்குகிறதா என்று பார்ப்பதற்காக, கஸ்தூரியார்வீதிச் சந்தி நோக்கிப் போனேன்.
அந்தச் சிறிய கடையில் தொடங்கிய நிறுவனம்தான், மணிக்கூட்டுவீதிச் சந்தியில் கிளைவிட்டுப் பரந்துவிரிந்திருந்தது.
அதனால், அதை மெயின்ஸ்ரோர்ஸ்(Main stores) என்றும், இதை டிப்பார்ட்மென்டல் ஸ்ரோர்ஸ் (Departmental stores) என்றும் சொல்வோம்.
சுருக்கமாக M.S., D.S.என்பதுதான் நமது புழக்கத்திலிருந்தது.
M.S. இன் வாசலை அடைந்ததும் பெரிய ஆச்சரியமே காத்திருந்தது.
வழமைபோல, அங்கே வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.
" அட.. வாவா வாவா வா.. எங்கையடாப்பா இவ்வளவுகாலமும் போனனி?"
அதன் முகாமையாளர் வாய்நிறைய வரவேற்றார்.
" எனக்குத் தெரியாதையா இது நடக்குதெண்டு"
" இடையில வந்து பாத்திருக்கலாமே.. எனக்கும் பில் கௌண்டருக்கு ஒரு ஆள் குறையுது. நாளைக்குக் காலம வாவன்.."
எனக்கோ என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
பட்ட கடனை அடைக்கலாம் என்பதுமட்டும்தான் கண்முன்னே பளிச்சிட்டது.
பழம் நழுவிப் பாலில் விழுந்ததோ அன்றி பால் நழுவிப் பழத்தில் விழுந்ததோ என்பதுபோல, குழப்பமான மனநிலையிலிருந்தேன்.
´குடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கொண்டு குடுக்கும் ` என்று, நாட்டுப்புறத்துப் பேச்சுவழக்கில் சொல்வார்களல்லவா? .
அதற்காக இப்படியா? ஒரேநொடியில், எனது பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமென்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை.
Saturday, April 22, 2023
Thursday, March 12, 2020
இஞ்சி 2 1/2 இன்ச்
கடலைப்பருப்பு 2 மேஜைக்கரண்டி
வரமிளகாய் 3
சின்ன வெங்காயம் 8
புளி 1 மேஜைக்கரண்டி
சீரகம் 1/4 தேக்கரண்டி
பூண்டு 2 பற்கள்
மரசெக்கு கடலெண்ணய் 1 மேஜைக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
மரச்செக்கு கடலெண்ணய் 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பில்ல 1 கொத்து
சீரகம் 1/4 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் 1 சிட்டிகை
வரமிளகாய் 1
1. புளியை சுடு தண்ணீரில் ஊற வைத்து நன்றாக கரைத்து புளி கரைசலை பிழிந்து எடுத்து வைத்து கொள்ளவும்.
Sunday, March 1, 2020
பன்னாடைகள்! பாலுண் குருகுகள்!!
*************************************
நீண்டகால இடைவெளிக்குப்பின், என்னைத் தொலைபேசியில் அழைத்திருந்தாள். ஜேர்மனிக்கு வந்த புதிதில், என்னுடன் மட்டும்தான் நெருக்கமாகப் பழகுவாள்.அடிக்கடி ஏதாவதொரு சாக்கில் வீட்டுக்கு வரவும் செய்வாள்.மிகவும் நல்லவளாகத்தான் தெரிந்தாள். ஆனால், காலப்போக்கில் அவளது நடவடிக்கைகளில் பாரிய மாறுதல் தெரியத்தொடங்கியது. வயதான ஜேர்மானியப்பெண்ணொருத்தியுடன்,பொது இடங்களில் மது அருந்தியதைக் கண்டதாகவும் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருந்தேன்.
முதலில் நான் அதை நம்பவில்லை.ஒருமுறை அவள் எனது வீட்டுக்கு வந்திருந்தபோது, பட்டும்படாமல் அதுபற்றி அவளிடம் உசாவினேன்.
அவளோ, மிகவும் வெளிப்படையாகவே அதை ஒப்புக்கொண்டது மட்டுமன்றி,_
" அதென்ன...ஆம்பிளையளெல்லாம் விரும்பின வாழ்க்கையை வாழலாம்; பொம்பிளையளெண்டாமட்டும் ஓராயிரம் கட்டுப்பாடு..இஃதென்ன சிறிலங்காவே? ஜேர்மனி. இங்கை யாரும் விருப்பம்போல வாழலாம்" என்று பொங்கினாள்.
இதை யான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதுவரை என்னை எதிர்த்தே பேசாதவள், அன்று பெருங்குரலெடுத்துப் பெண்ணியம் பேசினாள்.
இவள் ஜேர்மனிக்குவந்து, முழுமையாக மூன்றுமாதங்கள்கூட முடியவில்லை; ஜேர்மனியைப்பற்றி எனக்கே பாடம்நடத்த வந்துவிட்டாளே... கோபத்தைவிடவும் சிரிப்புத்தான் அதிகமாகவந்தது.
ஜேர்மனியிலும் எத்தனையோ நல்ல பழக்கவழக்கங்கள் பண்பாடுகள் உண்டு. நல்ல மனிதர்கள் உண்டு.
சாற்றினை ஓடவிட்டு, சக்கையைப் பிடித்து வைத்துக்கொள்ளும் பன்னாடைபோல, அந்தக் கழிசறையைமட்டும் வைத்துக்கொண்டு ஜேர்மனியையே அளக்கிறாளே...
பன்னாடை பன்னாடை... மனதுக்குள் திட்டிக்கொண்டேன்.
இனி, இவளுடன் பேசிப் பயனில்லை என்பது எனக்குப் புரிந்துவிட்டது. எனவே, பக்குவமாகவே அவளிடம் சொல்லிவிட்டேன்_ இனிமேல் வீட்டுக்கு வரவேண்டாம் என்று.
இந்தநிலையில்தான் மீண்டும் ஆறுமாதங்கள் கடந்தபின்பு தொலைபேசியில் அழைத்தாள்.
" அங்கிள், நான் மாலினி கதைக்கிறன்.." அவள் குரலில் தயக்கம் தெரிந்தது.
அந்தப்பெயரைக் கேட்டதும், எனக்கு எரிச்சலாகத்தான் இருந்தது. உடனடியாகவே இணைப்பைத் துண்டித்துவிடலாமா என்றும் யோசித்தேன். எனது மௌனத்தில் அவளுக்கு அது புரிந்திருக்கவேண்டும்.
அவசர அவசரமாகச் சொன்னாள்: "அங்கிள்! போனைக் கட்பண்ணீடாதேங்கோ பிளீஸ்.."
" ம்ம்ம்.. சொல்லு. என்ன விஷயம்?"
ஒருசில நொடிகள் மௌனத்தின்பின் இலேசானதொரு விம்மலுடன் தொடங்கினாள்:
" இதை என்னெண்டு உங்களுக்குச் சொல்றதெண்டுதான் யோசிக்கிறன் அங்கிள்..!"
" இஞ்ச வா பிள்ளை! எனக்கு நிறைய வேலையிருக்கு..சொல்றதைச் சுருக்கமாச் சொல்லு.என்ன விஷ்யம்?" மீண்டும் அழுத்திக் கேட்டேன்.
" பெத்த தகப்பனைப்போல, நீங்க எனக்கு எத்தின புத்திமதியெல்லாம் சொன்னீங்க.. ஆனா நா எதையுமே கேக்காம , இப்பிடியொரு பிரச்சினையில சிக்குப்பட்டுப்போனன் அங்கிள்.." விக்கல் விம்மல்களுக்கிடையில் துண்டுதுண்டாக, இவ்வளவையும் சொல்லிமுடித்தாள்.
அதன்பிறகு அவள் சொன்னவைகள் எதுவுமே எனக்குப் புரியவில்லை.
கேவிக்கேவி அழுதுகொண்டேயிருந்தாள்.முடிவில் பெருங்குரலெடுத்தே அழத்தொடங்கிவிட்டாள்.
´ஒருவேளை தண்ணி கிண்ணி போட்டிருப்பாளோ?` இப்படியான குறுக்குச்சிந்தனை என்மனதில் எழுந்தது. சினத்துடன் தொடர்பைத் துண்டித்துவிட்டேன்.
ஊரில்,இவளது குடும்பத்தையே நான் அறிவேன்.இவளுக்கு இன்னும் நான்கு சகோதரிகள் உண்டு. பெரிய குடும்பம்..
வறுமை காரணமாக, 15 வயதுச் சிறுமியான இவளை, 18 வயதான போலிக்கடவுச்சீட்டில் ஜேர்மனிக்கு அனுப்பிவைத்துவிட்டார்கள் இவளது பெற்றோர்.
இங்கு அனைவருக்குமே அவள் 18 வயதுப் பருவக்குமரிதான். ஆனால்,நான் அவளது குடும்பத்தையே அறிந்தவன் அல்லவா?
எனினும், எனக்கு இது தெரிந்ததாக, அவள் உட்பட யாரிடமும் நான் காட்டிக்கொண்டதில்லை. ஏதாவதொரு காரணத்திற்காக, அவள் நாடுகடத்தப்பட்டால்,என்மீது பழி விழுந்துவிடும் என்பதால், அதில் மிகவும் கவனமாகவே இருந்தேன்.
மீண்டும் தொலைபேசி அலறியது. அவளாகத்தான் இருக்கும் எனும் நினைப்பில்,அதை அப்படியே அலறவிட்டேன்.
´இவள் என்னை ஒரு வழிபண்ணாமல் விடமாட்டாள் போல இருக்கே..எனக்குத் துளியும் தேவையில்லாத பிரச்சினை இது. என்னைக் கேட்டா ஒவ்வொன்றும் இவள் செய்தாள்?`
திடீரென்று மின்னலாக ஒன்று என் புத்தியில் உறைத்தது:
´ஒருவேளை, நாடுகடத்தும் செய்தி கிடைத்திருக்குமோ?அதனால்தான் இப்படி அழுகிறாளாக்கும்.
அப்படி, இவள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், அந்தக் குடும்பமே தற்கொலை செய்வது மட்டும் நிச்சயம்.
சரி.. எதற்கும் நம்மால் முடிந்ததைச் செய்வோமே` என்ற முடிவுடன், தொலைபேசியை எடுத்தேன்.
மறுமுனையிலிருந்து ஒரு ஜெர்மானியப்பெண்ணின் குரல் கேட்டது.
`அடச்சீ! இவளா! அந்தப் பன்னாடைக்காக, கூட இருக்கிற பன்னாடை வருகுதுபோல வக்காலத்துக்கு.` அருவருப்புடன் நெளிந்தேன்.
ஆனால், வந்தது அந்தப் பன்னாடை அல்ல!
மாறாக, இந்த நகரத்திலேயே புகழ்பெற்ற சட்டத்தரணியான இங்க்ரிட் மாயா என்ற இளம்பெண்.
இங்க்ரிட் மாயாவைப்பற்றிச் சுருக்கமாகச் சொன்னால்,_
முப்பதே வயதான, வனப்புமிக்க ஜெர்மானிய இளமங்கை.
தமிழர்தம் வாழ்வியலின் இரசிகை.இயற்கையின் நிரந்தரக் காதலி.
இந்த இயற்கையின்மீது கொண்ட காதலினாலேயே,கணவனிடமிருந்து மணவிலக்குப் பெற்றவள்.
அதாவது, அவள் கணவனுடன் குடியிருந்த வீட்டின்முன், மரமொன்றை நடுவதற்காக, நகர நிர்வாகம் முயன்றபோது, அதை,கணவன் தடுத்து நிறுத்தியதில் ஏற்பட்ட பிணக்கு, மணமுறிவுவரை போய்விட்டது.
தொலைபேசியில் என்னை அழைத்த இங்க்ரிட்,முக்கியமான விஷயம் பேசவேண்டுமென்றும், தனது வீட்டுக்கு வரமுடியுமா என்றும் கேட்டாள்.
´என்னவாயிருக்கும்?` என்ற குழப்பத்துடன், அடுத்த பத்தே நிமிடங்களில் அங்கு நின்றேன்.
என்னை வரவேற்று அமரவைத்தவள் முகத்தில் சற்றே இறுக்கம் தெரிந்தது.
எடுத்த எடுப்பிலேயே "மாலினியைப்பற்றி ஏதாவது தெரியுமா?" என்று கேட்டாள்: .
அவள் கேட்ட தோரணையில், ஏதோ பெரிதாக நடந்திருக்கிறது என்பது
எனக்குப் புரிந்துவிட்டது.
நீண்டகாலத்தின்பின் மாலினி தொலைபேசியில் அழைத்ததையும், ஏதோ சிக்கல் என்று மட்டும் சொல்லிவிட்டு அழுதுகொண்டிருந்ததையும் சொன்னேன்.
" அவள் கர்ப்பமாக இருக்கிறாள்; அதை உன்னிடம் எப்படிச் சொல்வது என்ற தடுமாற்றத்தில்தான் அழுதிருக்கிறாள்போலும்."
´என்னடா இது! இப்படியொரு குண்டைத் தூக்கிப்போடுறாள்...` அதிர்ச்சியில் உறைந்தேன்.
அந்த ஏழைக்குடும்பத்தின் நிலைதான் என்கண்முன்னே நிழலாடியது.
அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுன்னரே, அடுத்த குண்டைத் தூக்கிப்போட்டாள் இங்க்ரிட்.
" அதற்குக் காரணம் யார் தெரியுமா? குணாதான்"
அதிர்ந்து போயிருந்த என்னை,இது மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
குணா என்று இவள் குறிப்பிடுவது,மணவிலக்குப் பெற்றபின், இவளுடன் ´ஒன்றாக வாழ்தல்` ( Living together) எனும் முறையில், சேர்ந்துவாழும் ஒரு தமிழ் இளைஞன்.
குணாவின்மீது எனக்குக் கொலைவெறித் தாக்குதல் நடத்துமளவுக்குக் கோபம் கோபமாக வந்தது.
´அட நாயே! உனக்குத்தான் வெள்ளைப்பணியாரம் கிடைச்சுட்டுதே.. அதுக்குப்பிறகும் ஏண்டா அந்த ஏழைக்குடும்பத்தைச் சீரழிச்சே..?` கொச்சையாகவே மனதுக்குள் திட்டினேன்.
இங்க்ரிட் தொடர்ந்தாள்: " மாலினிக்கு நான் உதவிசெய்யலாம் என்று நினைக்கிறேன். சட்டப்படி இதைக் கையாண்டு, குணாவுக்கே அவளைத் திருமணம் செய்துவைக்கவேண்டும். நீ என்ன நினைக்கிறாய்?" என்றபடி என்முகத்தையே உற்றுப்பார்த்தாள்.
தலையைக்குனிந்தபடி நெற்றியைப் பிசைந்துகொண்டே நான் பலத்த யோசனையில் ஆழ்ந்தேன்.
சட்டப்படியான நடவடிக்கை என்றால்,இருவருக்குமே கொழும்பிலிருந்து ´திருமணமாகாதவர்கள்` எனும் சான்றிதழ் பெறவேண்டும். அப்போது, மாலினியின் வயது தெரியவருமே..
இனியும் இதை மறைப்பது நல்லதல்ல... என்மனதினுள் எழுந்த போராட்டத்துக்கு, நானே தீர்வையும் கண்டுபிடித்தேன்.
" என்ன கடுமையான யோசனை? இதில் உனக்கொன்றும் பிரச்சினை வராது.மொழிப்பிரச்சினைக்காகத்தான் உன்னைக்கூப்பிட்டேன். நான் சொல்கிறதை, அவளுக்குப் புரியவைத்துவிட்டால் போதும். பாவம். அவள் சின்னப்பெண்தானே...
" சின்னப்பெண் அல்ல! அவள் சிறுமி. அதைத்தான் சொல்லலாமா விடலாமா என்று யோசிக்கிறேன்" என்னையுமறியாமல் கக்கிவிட்டேன்.
" உண்மையாகவா?" ஆச்சரியத்தில் அவள் விழிகள் விரிந்தன. இப்போது, அவள் கடுமையான யோசனையில் ஆழ்ந்தாள்.
ஓரிரு நிமிடங்கள் அங்கு நிலவிய அமைதியை, அவளே குலைத்துக்கொண்டு பேசத்தொடங்கினாள்.
" சரி.. இப்போதைக்கு, ஜேர்மனியைப் பொறுத்தவரை அவளது வயது 18 ஆகவே இருக்கட்டும். ஆனால், குணா இதற்குப் பொறுப்பேற்றேயாகவேண்டும். இன்னும் மூன்று ஆண்டுகளின்பின், முறையாக இருவருக்கும் திருமணம் செய்துவைப்போம். அதுவரை, மாலினி எனது அம்மா வீட்டில் இருக்கட்டும். அம்மா அவளை நன்கு கவனித்துக்கொள்வாள்.என்ன சொல்கிறாய்?" என்றவாறு என்முகத்தைக் கூர்ந்து நோக்கினாள்.
அவளைப் பெருமையுடன் பார்த்தேன்.
இரண்டு பன்னாடைகளுக்கு மத்தியில், ஒரு பாலுண் குருகு இவள்!
எனது சம்மதத்தையும் வாழ்த்தையும் தெரிவித்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சுடன் வீடுதிரும்பினேன்.
Tuesday, February 18, 2020
போர்க்குற்றமா?இனப்படுகொலையா?
போர்க்குற்றமா?இனப்படுகொலையா?
தமிழாராய்ச்சி மாநாடு
போர்க்குற்றமா?இனப்படுகொலையா?
போர்க்குற்றமா?இனப்படுகொலையா?
கறுப்பு ஜூலை
போர்க்குற்றமா?இனப்படுகொலையா?
சுன்னாகம் சந்தை
ஒதியமலை
செட்டிக்குளம்
மன்னார்
வட்டக்கண்டல்
குமுதினிப்படகு
வல்வெட்டித்துறை
தம்பட்டை
கிளிவெட்டி
உடும்பன்குளம்
அக்கரைப்பற்று
இறால்பண்ணை
கொக்கட்டிச்சோலை
கல்முனை
திராய்க்கேணி
வீரமுனை
கிழக்கு பல்கலைக்கழகம்
வந்தாறுமூலைப்பல்கலைக்கழகம்
மட்டக்களப்பு பல்கலைக்கழகம்
சத்துருக்கொண்டான்
சாவகச்சேரி சந்தை
கொண்டச்சி
ஏறாவூர்
இருதயபுரம்
நாயன்மார் திடல்
கொக்கட்டிச்சோலை
பொலன்னறுவை
மயிலந்தனை
பாலியாவெட்டை
கிளாலி
வண்ணாத்தி ஆறு
கல்வியங்காடு
யாழ்ப்பாணம் கடல்நீரேரி
புல்மோட்டை
நவாலி தேவாலயம்
நாகர்கோயில் பாடசாலை
செம்மணி
குமாரபுரம்
கிளிவெட்டி
திருகோணமலை
தம்பலகாமம்
புதுக்குடியிருப்பு
பள்ளிக்குடா
சிலாவத்துறை
கொழும்புத்துறை
மிருசுவில்
திருகோணமலை
அல்லைப்பிட்டி
பேசாலை
மூதூர்
செஞ்சோலை
வாகரை
தாண்டிக்குளம்
படகுத்துறை
இலுப்பக்கடவை
தர்மபுரம் வைத்தியசாலை
வல்லிபுனம் வைத்தியசாலை
சுதந்திரபுரம்
உடையார்கட்டு மருத்துவமனை
புதுக்குடியிருப்பு மருத்துவமனை
பொன்னம்பலம் மருத்துவமனை
புதுமாத்தளன்
வலையன்மடம்
முள்ளிவாய்க்கால்
இன்னுமா வேண்டும் ஆதாரம்?
மன்னிக்கவும் சொல்கிறது!!!
எதை மன்னிப்பது????