எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Thursday, April 7, 2011

யானை பார்த்ததுபோல் ‘ புலி ‘ யைப்பார்த்தவர்கள் - பாகம் 1


’ கிளையில் அமர்ந்திருந்த கிளியின் கழுத்துப்போல ‘ மிகத்துல்லியமான பார்வையுடன் , திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட தமிழீழப்போராட்டமானது, -
‘ தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ‘ என்பதுபோல்,
கணனி கிடைத்தவன் எல்லாம் தலைவனாகி, -
எதிரிக்காக, ஒன்றிற்குமேற்பட்ட பாதைகளைத்திறந்து செங்கம்பளம்விரித்து நிற்கிறது.
தமிழீழத்துக்கான எமது போராட்டம்,
தற்காலிகமாக முடங்கியுள்ளதேதவிர,
’முடித்துவைக்கப்படவில்லை ‘ என்பதை,
மௌனிக்கிறோம் ‘
என, மிகத்தெளிவாகத் தலைவர் குறிப்பிட்டுள்ளபோதிலும்,
அதைக்கணக்கிலேயே எடுத்துக்கொள்ளாமல்,
‘ புலிகளின் சகாப்தம் முடிந்துவிட்டது ‘
என்று மனனம் செய்வதிலேயே இன்பம்காண்பவர்கள்தாம் இங்கு அதிகமாக உள்ளனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இதுவரை காட்டிக்கொடுப்பு வேலைகளைமட்டுமே கனகச்சிதமாக்ச்செய்துகொண்டிருந்த பலர்,
‘ அண்ணை எப்ப சாவான் ; திண்ணை எப்ப காலியாகும் ‘ எனக்காத்திருந்ததுபோல -
இந்த இடைவெளியை நிரப்புவதில் போட்டிபோட்டுக்கொண்டு பொருளீட்டமுனைகின்றனர்.
ஆனாலும், இவர்கள் ,தமது துரோகமுகத்துக்கு , இனப்பற்று என அவர்களே சொல்லிக்கொள்ளும் ஒரு முகமூடியை அணிந்தபடியே புலம்பெயர்தேசத்துமக்களுள் வலம்வருகிறார்கள்.
அங்கு முள்வேலியிலுள் அல்லற்படும் மக்களுக்கு உதவிசெய்யப்போகிறோம் என்று சொல்லிக்கொண்டே பொருட்களாகவும் பணமாகவும் வசூலித்து தமது வாழ்வு வசதிகளைப்பெருக்கிக்கொள்கிறார்கள்.

உலகமே வியக்குமளவுக்கு இத்தனை அளப்பரிய தியாகங்களைச்செய்து, தமிழர்பிரச்சினைகளை உலகத்தின் கண்களுக்குத் தெரியவைத்த புலிகளைப்பற்றி இவர்களிடம்கேட்டால்,
“ இதைப்பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்க எமக்கு நேரமில்லை ; மக்களைப்பற்றித்தான் எமது கவலையெல்லாம்..... “
என்பதுபோன்ற தத்துவங்களை உதிர்த்துவிட்டு, -
புலம்பெயர்தமிழரைச்சுரண்டித் தமது வங்கிக்கணக்கை நிரப்புவதிலேயே குறியாக உள்ளனர்.
அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்திடமே தட்டிப்பறித்து, தங்களுக்கு ஆதரவான சிங்களருக்கு வழங்கும் மகிந்தா கும்பலுக்கு , இவர்கள் எம்மாத்திரம்?
அப்படி இவர்கள் தட்டித்தவறி ஏதாவது, தமது உறவினர்களுக்கு வழங்கும் திட்டத்துடன் கொண்டுபோனாலும், அது முழுமையாக கொழும்பைத்தாண்டாது என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.
செஞ்சிலுவைச்சங்கமானது, தான் கொண்டுபோன பொருட்களை, வினியோகம் செய்யும் இடத்தில்வைத்துத்தான் சிங்களக்காடையரிடம் பறிகொடுத்தது ; ஆனால், இவர்களோ தாமாகவே சிங்களரின் காலடியில்வைத்து, அதில் மிஞ்சும் ஓட்டை உடைசல்களைத்தான் அப்பால் கொண்டுபோகமுடியும். இதுதான் யதார்த்தம்.
யானை பார்த்த குருடர்கள் கதை நாமெல்லாம் சிறுவயதில் படித்ததுதான்.
ஒருவன் வாலைமட்டும் தடவிப்பார்த்துவிட்டு, யானை ‘ விளக்குமாறு ‘ போல் உள்ளது ‘ என்றானாம். மற்றவன், துதிக்கையைத்தடவிப் பார்த்துவிட்டு , உலக்கை போலுள்ளது என்றானாம். மற்றவர்கள் காலைத்தடவிப்பார்த்துவிட்டு ‘ தூண் ‘ என்றும், வயிற்றுப்பகுதியை ப்பார்த்துவிட்டு ‘ சுவர்’ என்றும் சொன்னார்களாம்.

இதைப்போலத்தான் இவர்களும்,----

மகிந்தாவின் பொய்ப்பிரச்சாரப்பீரங்கிகளை மட்டும் தடவிப்பார்த்துவிட்டு,
தம்மால் முடியாததை மகிந்தா செய்துமுடித்துவிட்டதாக, ஆனந்தத்தில் துள்ளிக்குதிப்பவர்கள்.
இந்த ரகத்தைச்சேர்ந்த இவர்கள் எக்காலமும் இப்படியேதான் இருப்பார்கள். இவர்களெல்லாம் முற்றாகப் புறந்தள்ளப்படவேண்டியவர்களே!
எனினும் இந்தப் புலி எதிர்ப்பாளர்களில் இன்னோருவகையினரும் இருக்கத்தான் செய்கின்றனர். அதாவது, தமக்கோ அன்றித் தமது உறவினருக்கோ போரின்போது ஏற்பட்ட பாதிப்புகளுக்காகப் புலியைக்குறைசொல்பவர்கள். இவர்களை ஓரளவு மன்னிக்கலாம் - இவர்களது அறியாமைக்காக....
ஈவிரக்கமேயில்லாமல் குழந்தைகளைக்கூட பொசுக்கித்தள்ளிய சிங்களக்காடையரைவிட்டு , மானங்காக்கவந்த மறவரைக் குற்றஞ்சொல்லும் இவர்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்களே!
இந்த வகையினரை வழிக்குக்கொண்டுவருவது, தமிழுணர்வாளர்களின் சாதுரியமான அணுகுமுறையிற்றான் தங்கியுள்ளது.
மேற்சொன்ன இவ்விரண்டு பிரிவினரையும்விட, இன்னொருபிரிவினரும் உள்ளனர்.

இந்தப்பிரிவினர்பற்றி இரண்டாம்பாகத்திற்காண்போம்.

----------- சிவம் அமுதசிவம்


3 comments:

  1. மிக நன்றாக உள்ளது. அடுத்த பாகத்தைக்காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  2. சரியான ஆய்வு. ‘ கிளையில் அமர்ந்திருந்த கிளியின் கழுத்துப்போல ‘ ..... வெகு அபாரம்.
    அருச்சுனன் அம்புவிட்ட கதையை நல்லாக சொல்லியிருக்கு.
    2ம் பாகத்ர்குக்காக காத்திருக்கிறோம்..

    ReplyDelete
  3. கிளையில் அமர்ந்திருந்த கிளியின் கழுத்துப்போல - மக அருமையான உதாரணம்

    ReplyDelete