எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Saturday, October 5, 2013

 ****-__ விகனின் விகடம்-__****

பொதுவாகவே தமிழ்நாட்டின் சஞ்சிகைகள், தினசரிச் செய்தி நிறுவனங்களெல்லாம், -
தமக்குள் தாமே இரண்டாகப் பிரிந்து, ஒன்று அரசுக்கு ஆதரவாகவும், மற்றையது எதிர்கட்சிக்கு ஆதரவாகவும் எழுதும் போக்குடையவை.  
( விகடன் - ஜூனியர் விகடன்)
அவர்களின் குறிக்கோள்: இரு பக்கத்திலும் தாமே முன்னணிவகிக்கவேண்டும்....
தாம்மட்டுமே சம்பாதிக்கவேண்டும்  என்பதே!
அந்தவகையில், விகடன் சஞ்சிகையானது , அண்மையில் புலிப்பெண்போராளிகளைக் கொச்சைப்படுத்தி ஒரு கட்டுரை வெளியிட்டு, அதன்மூலமே நன்றாகச் சம்பாதித்தமை யாவரும் அறிந்த விடயம்.
அதன் தொடர்ச்சியாக, இப்போது பிரபல எழுத்தாளரான யமுனா ராஜேந்திரனை விலைக்கு வாங்கித் தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது!
நடுநிலையாக எழுதியிருக்கிறாராம்...
இவர்களே அதற்குத் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.
இப்படித்தீர்ப்பு வழங்குமளவுக்கு, விகடனுக்கோ அன்றி இந்த யமுனாவுக்கோ, -
புலிகளின்மீது இவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணிபற்றி எதுவுமே தெரியாது.
இவர் புலிகளில் சொல்லும் குற்றச்சாட்டு இதுதான்!:

##சகோதரப் படுகொலைகள், ராஜீவ் காந்தியின் கொலை, யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம் மக்களை திடீரென வெளியேற்றியது ஆகிய மூன்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் மிக முக்கியமான தவறு.##

சகோதரப்படுகொலை என்று, சகட்டுமேனிக்கு,  கருணாநிதி பாணியில் குற்றஞ்சாட்டும் இவர்,-
உண்மையிலேயே ´நடுநிலையாளராக இருந்தால், -
 அதன் பின்னணிபற்றியும் ஆராய்ந்திருக்கவேண்டும்.

*** ஆதிக்கவெறிபிடித்த இந்தியத் தலைமைகள், மிகவும் திட்டமிட்டமுறையில், பல கோடிகளைச் செலவுசெய்து, தமிழீழத்தில் பல போராளிக்குழுக்களை உருவாக்கியமை....
அந்தக் குழுக்களுக்கிடையில் பகைமையை உருவாக்கி வளர்த்துவிட்டமை....***

என்று இவைகளையெல்லாம் புறந்தள்ளி, வெறுமனே பார்ப்பனரின் குரலாகவே ஒலித்திருக்கிறார் இந்த யமுனா ராஜேந்திரன்!

2. ராசீவ் கொலை என்று பார்த்தால், -
சூ சாமி சந்திராசாமி என்று, இதில் சம்பந்தப்படிருக்கும் பல ஆசாமிகள் இன்னமும் விசாரிக்கப்படாத நிலையிலும்,-
இறுதித்தீர்ப்பே இன்னும் வராத நிலையிலும், இவ்வாறு புலிகளின்மீதே பழியைப்போடுபவருக்குப் பெயர்தான் நடுநிலையாளரோ?
3. யாழ். மண்ணைவிட்டு முசுலிம்களை வெளியேற்றியமை என்பது தவறுதான் எனக்கொண்டாலும், -
அந்தக்காலகட்டத்தில் தவிர்க்க முடியாததொன்றாகவே அஃதிருந்தது!
யாழ்ப்பாணத்தில் வசித்த முசுலிம்கள், போராட்டத்திற்கு எவ்விதமான பங்களிப்பையும் செய்யாமலிருந்தது மட்டுமல்லாமல், -
அரச படைகளுக்காக உளவு பார்க்கும் வேலைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
யாழ். இலுள்ள முக்கியமான பள்ளிவாசல்களில் ஒன்றிலிருந்து, பெருமளவான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே, -
யாழ் மக்களுக்கும் முசுலிம்களுக்குமிடையிலான முறுகல்நிலை அதிகரித்தது.
பெரும் மோதல் உருவாகி, அதன்மூலம் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவே அன்று அப்படியானதொரு முடிவைப் புலிகள் எடுத்தனர்!
அதாவது, ஒரு நாடு எவ்வாறு அவசரகால நடவடிக்கை எடுக்குமோ, -
அதேபோன்றதொரு நடவடிக்கைதான் அது!
இன்னும் சொல்லப்போனால், -
´இந்திய குடிமக்களைத் திருப்திப்படுத்த`என்று நியாயம் கற்பித்து , எவ்வாறு கசாப் இற்கு மரணதண்டனை வழங்கப்பட்டதோ, -
அதுபோல...
ஒருதலையாகவே சிந்தித்தவரெல்லாம் நடுநிலையாளர் என்று, போக்கிரி வியாபாரிகள் பட்டம் கொடுக்கிறார்கள்!
இதைவிடவும் வேடிக்கை என்ன இருக்கிறது?


No comments:

Post a Comment