எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Wednesday, April 20, 2011

’ பாகம் - 2 ‘ யானை பார்த்ததுபோல்......

மேற்குநாடுகளில் வாழும், புலி எதிர்ப்பாளர்களில் விசித்திரமான ஓரிரு பிரிவினரைப்பற்றி பாகம் - 1 இல் பார்த்தோம்.
இந்த வகையினரில் புத்திசாலித்தனமாகப் பொருளீட்டும் மற்றொருபிரிவினர்பற்றியும் இங்கு சிறிதளவு பார்ப்போம்.
இவர்கள் மக்களிடம் பணம் வசூலிக்கப்போகும்போது, தனிப்பட்டவர்களாகப்போகாமல், ஒரு நிறுவனமாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு போவார்கள்.
அதுவும், ஏற்கெனவே பிரபலமான தொண்டர்நிறுவனங்களின் பெயர்களின் சாயலிலேயே தமது நிறுவனத்தின் பெயரையும் அமைத்துவிடுவார்கள்.
உதாரணமாக, ‘ செஞ்சிலுவைச்சங்கம் ‘ என்பதிலுள்ள ‘ சிலுவை ‘ என்பதைத் தமது நிறுவனத்தின் பெயரில் சொருகிக்கொள்வார்கள்.
அல்லது, ‘ உதவும் கரங்கள் ’ ( Helping Hands ) என்பதை ‘ கரங்கள் ‘ என்றோ ’ கரம் ‘ என்றோ பயன்படுத்துவார்கள்.
இதன்மூலம், மக்களின் சந்தேகப்பார்வையிலிருந்து தப்பிக்கொள்வார்கள். இன்னும், அவ்வப்போது ஏதாவது ஒரு சாக்கில் , தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச்சந்தித்து, மறக்காமல் அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து, அதைப்பிரபலப்படுத்தி, தாம் மேல்மட்டங்களுடனெல்லாம் தொடர்புள்ளவர்கள் என்பதுபோல மாயை காட்டுவார்கள்.
யாராவது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், இவர்களைச்சந்திக்க மறுத்தால்,
அவர்களைக் கீழ்த்தரமாகத்திட்டித் தமது வலைப்பூக்களில் செய்தி வெளியிடுவார்கள்.
இப்படிச்சேர்த்த பணத்திலேயே இலங்கைக்குச் சுற்றுலாப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள தமது உறவினர்கள் தெரிந்தவர்களுக்கெல்லாம் ஒருபகுதியைக்கொடுத்துவிட்டு , இவர்களுக்குத்தான் புதிய வாழ்க்கைதொடங்க உதவுகிறோம் என்று ஏமாற்றுவார்கள்.
முழுமையான வரவு - செலவுக்கணக்குகளைக்கூடக்காட்டமாட்டார்கள்.
“ சிறியதொகை தந்தவர்களின் பெயரை வெளியிட்டால் அவர்கள் மனவருத்தப்படுவார்கள் “ என்ற சாக்குச்சொல்லி
அரைகுறைக்கணக்குவழக்கையே வெளியிடுவார்கள்.
தட்டிக்கேட்க யாரால்முடியும்? புலியின் கதைதான் முடிந்துவிட்டதே! ... என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடையவர்கள் இவர்கள்!

இப்படியாகப் புலியைப்பார்த்த ‘யானைபார்த்த குருடர் ’ களில் -
முதலாவது வகையின் முதன்மூன்று பிரிவினர்தான் இவர்கள்.

இன்னும், இவர்களிடையேயும் , -
முகத்துக்கஞ்சி ...........யாடுவோர் என்ற ரகமும் இருக்கத்தான் செய்கிறது.அதாவது, புலி தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் - நிகழ்ச்சிகளை மனதார இவர்கள் தவிர்க்கவிரும்பினாலும் , அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளமாட்டார்கள்.
தற்செயலாகத் தமிழீழம் கிடைத்துவிட்டால், அங்குள்ள தமது நிலபுலங்கள் வீடுகளைப் பார்க்கமுடியாமற்போய்விடுமே என்பதற்காக -
புலி ஆதரவாளர்கள் பார்க்கும்படியாக இடைக்கிடை அங்கு முகம் காட்டுவார்கள்.
அதிலும் இவர்கள் புத்திசாலித்தனமாக, புலி ஆதரவாளர்களால் நடாத்தப்பெறும் ‘மே தின ஊர்வலம் ’ போன்ற, இரண்டிற்கும் இடைப்பட்டவற்றிற்கே சமுகமளிப்பார்கள்.
இதன்மூலம், தமது துரோக வட்டத்தில் கேள்வி எழுந்தால், -

“ இவங்கடைக்கு ஆரும் போவாங்களே? நான் மேதின ஊர்வலம் எண்டபடியாத்தான் போனனான் “ என்று சொல்லித்தப்பிக்கொள்வார்கள்.

நானறிந்த இவ்வகையான ஒருவர், தனது பிள்ளைகளை, புலிவாடையே படக்கூடாது என்ற கரிசனையுடன் மிகவும் கவனமாகவே வளர்த்துவந்தார்.
ஆனால், அவரின் மூத்த மகன், கடந்த மாவீரர்தினத்திற்கு வந்திருந்தான்.
எதிர்பாரமல் என்னைச் சந்தித்தவன், தான் அங்கு வந்தமைபற்றித் தந்தையாரியம் சொல்லவேண்டாம் என்று என்னிடம் கெஞ்சிக்கேட்டுக்கொண்டான்.
நானும், ‘ அப்பன் அப்படி இருந்தாலும், இவனாவது இளைஞர் அமைப்புடன் சேர்ந்தியங்குகிறானே என்று சந்தோஷப்பட்டேன். பிறகுதான் தெரிந்தது - அவன் வந்தது , அங்குவரும் பெண்பிள்ளைகளைப்பார்ப்பதற்காக என்று...
இஃதெப்படியிருக்கிறது?
தமிழினத்தின் விடிவிற்காய் தம்மையே ஆகுதியாக்கிய அந்த ஒப்பற்ற மாவீரர்களுக்கான நினைவுநாள், எப்படியெப்படியெல்லாம் பயன்படுகிறது.

இப்படியானவர்கள் நமது சமுதாயத்தின் குள்ளநரிகள்.
இவர்களுடன் எதையும் மிகுந்த அவதானத்துடனேயே பகிர்ந்துகொள்ளவேண்டும்.

இன்னும் ஒருசில வினோதமான சனங்களும் இங்கு இருக்கத்தான் செய்கின்றன.
இவைகளைப்பொறுத்தவரை , ‘ இராமன் ஆண்டாலென்ன... இராவணன் ஆண்டாலென்ன....
ஒலிவாங்கியுடன் மேடை எங்கெல்லாம் கிடைக்குமோ , அங்கெல்லாம் தோன்றுவார்கள் இந்த ஈனப்பிறவிகள்.
புலிகள் களத்தில் நின்ற, கடந்த 2008வரை, துரோகிகளின் மேடை கிடைக்காமையால், வேறுவழியின்றி புலிகளுடனேயே நின்று
வீரவசனம் பேசித்திரிந்தவர்கள் -
தமிழகத்தலைவர்கள் தோன்றும் மேலைத்தேய மேடைகளிலெல்லாம் தலையைக்காட்டி, தம்மைப் பெருமிதப்படுத்திக்கொண்டவர்கள் -
2009 இலிருந்து புலிகளின் பின்னடைவைக்கண்டு மெல்லமெல்ல காணாமற்போகத்தொடங்கினர்.
அதுமட்டுமல்லாது துரோகக்குழுக்களைத் தேடிப்போகவும் தலைப்பட்டனர்.

இங்கு புலிகளின் மேடைகளில் பேசியவீர வசனங்களுக்கு முழுமாறாக , அங்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் , மறக்காமல் புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் தூற்றுவார்கள்.
இன்னும், ”தொலைந்தான் பிரபாகரன்.இனி பிரச்சினையில்லை; சும்மா சும்மா காசு காசெண்டு இங்கை வரமாட்டாங்கள்” என்று கூடிக்கதைப்பார்கள்.
இவர்களெல்லாம், புலியின் பலத்தைப் பார்க்காமல்,
மலத்தைமட்டும் பார்த்தவர்கள்.
ஒன்றிலிருந்து ஐந்துவரை அறிவுகொண்ட ஜந்துக்கள்!
அப்படித்தான் இருப்பார்கள்.
இவை மட்டுமல்ல... இன்னும் தினுசு தினுசாக எத்தனையோ ரகங்கள் உண்டு.அத்தனையையுமிங்கு அலசமுனைந்தால், இன்னும் நூறு பாகங்கள் முடிந்தாலும் இக்கட்டுரை முடியாது. எனினும், குப்பை கூளங்கள் என்றால் எப்படி இருக்கும் என்று அறிந்துவைத்திருந்தாற்றானே சமயத்தில் நாம் அவற்றைத்தவிர்த்து நடந்துகொள்ளமுடியும்?
இந்தக்காரணத்துக்காகத்தான் , இரண்டு பாகங்கள் முடியும்வரையில் இதை அலசவேண்டியதாயிற்று.
இனி, அடுத்த பாகத்தில் புலி ஆதரவாளர்களிடையே உள்ள முரண்பாடுகளையும் அதற்கான காரணங்களையும் விரிவான முறையில் ஆராய்ந்து அம்முரண்பாடுகளைக் களைவதற்கான வழிவகைகள் பற்றியும் ஆராய்வோம்.
மீண்டும் மூன்றாம் பாகத்தில் சந்திப்போம் உறவுகளே!

அன்புடன்
சிவம் அமுதசிவம்


No comments:

Post a Comment