எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Monday, May 31, 2010

மகி சிவம் ஆனார் சுகிசிவம்


இந்தநாள் இனியநாள் எனும் நிகழ்ச்சியின்மூலம் தமிழர்களிடையே மிகப்பிரபலமானவர்தான் இந்த சுகிசிவம் என்ற சு.கி.சிவஞானகிராமணியார்.
கடந்தசிலமாதங்களுக்குமுன் இவர், கொழும்பு சென்று திரும்பியபின் வெளியான ‘ இந்தநாள் இனியநாள்’ இல், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை மிகவும் கேவலமாகக்க் குறிப்பிட்டமையானது ஜேர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற , ஈழத்தமிழர் செறிந்துவாழும் நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது .

அடிப்படையில் இவர், ஒரு தமிழராக இருந்தும், இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டமையையொட்டி, ஈழத்தமிழர் இவரில் அதிருப்தி கொண்டிருந்தனர்.
ஸ்ரீலங்காவின் ஊதுகுழலாகச்செயற்படுகிறாரோ எனும் சந்தேகக்கண்ணுடன் நோக்கினர்.
ஏனெனில், இராசபச்சே குடும்பம், தனது அராஜக ஆட்சியைத்தொடர்வதற்கு, புலம்பெயர்ந்த தமிழர்கள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர் என்றும், அவர்களைக்குறிவைத்தே தமது புலனாய்வுப்பிரிவு செயற்படுவதாகவும் வெளிப்படையாகவே பலதடவைகள் அறிக்கைகள் வெளியிட்டமையை நேயர்கள் மறந்திருக்கமுடியாது.
இதனால், ஆங்காங்கே பலரும் தத்தமது வலைத்தளங்களில் எதிர்ப்புகளை வெளியிட்டுமிருந்தனர்.

இது பழையசெய்தி!

புதிய செய்தி என்ன தெரியுமா?

கடந்தவாரம் , அல்ஜசீராதொலைக்காட்சிக்கு , மகிந்தா (எளிமையான) ஆங்கிலத்தில் வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்த, புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய விடயமானது, அன்றே சுகிசிவம் அவர்களின்வாயிலிருந்து,‘இந்தநாள் இனியநாள்’ இல் வந்திருக்கிறது .

நிகழ்ச்சியின் தலைப்புக்கு எள்ளளவும் பொருத்தமில்லாத ஒருவிடயத்தை வைத்து அப்படித் தாழி தாழியென்று தாழித்திருந்தார் சுகிசிவம்.
அதிலே, எதைத்தான் இவர் சொல்லவந்தார்?
சிங்களத்தால் சிதைக்கப்பட்ட உடைந்தவீடுகளில், அங்குவாழும் மக்கள் குடியேறிவிட்டால், அன்றையநாள் இனியநாளாகிவிடும் என்பதையா?
மாறாக :
எதிரி எமது வாழ்விடங்களுக்குள்ளேயே உட்புகுந்து, அழிவுகளை மேற்கொள்ளுமளவுக்கு நாம், எமக்குள்ளேயே ஒற்றுமையின்றி இருந்துவிட்டோம் ; இனியாகிலும், மேற்கொண்டு எமது வீடுகள் உடையாதபடி, உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டால் ‘ இந்தநாள் இனியநாள்’
என்றவகையிலல்லவா அஃதமைந்திருக்கவேண்டும்?
இஃதல்லவோ ஒரு அறிவாளிக்கு அழகு?

அதைவிடுத்து, ‘புலம்பெயர்ந்த தமிழர்கள் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ஓடிப்போனவர்கள்.... அங்கு உல்லாசவாழ்க்கை வாழ்கிறார்கள்’ அப்படி இப்படியெல்லாம், மிகவும் மலிவானசொற்பிரயோகங்களுடன் அவர் சொன்னமுறை -
புலம்பெயர்ந்திருப்பவர்கள் என்றாலே, ஏதோ ‘ பயந்தாங்கொள்ளிகள்’ என்பதுபோலவும் -
‘ சொந்தச்சகோதரர்கள் துன்பத்தில் சாதல்கண்டும் சிந்தையிரங்காதவர்கள்’ என்பதுபோலவும் -
ஒரு தோற்றத்தை, தமிழகத்திலும் ஈழத்திலும் வாழும் தமிழர் மனங்களில், ஆழமாகப்பதியவைக்கும் முயற்சியல்லவா?

இதைத்தானே மகிந்தாவும் வெகுசிரமப்பட்டுச் சொல்லிமுடித்தார்?
மகிந்தாவுக்குத்தான் புலம்பெயர்தமிழர்கள் நேரடியான எதிரிகள் ;

இவரைப்பொறுத்தளவில் , இதற்கான தேவைதான் என்ன?
இவருக்கும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் அப்படி என்னதான் பிணக்கு?
எதுவுமில்லையே!
இன்னும் சொல்லப்போனால், இவர் தமது ஆடம்பரவாழ்வுக்கு நம்பியிருப்பது புலம்பெயர்ந்த தமிழர்களைத்தானே!
இந்தியாவில் வருடம் முழுவதும், ஓடி ஓடிப்பிரசங்கம் செய்து கிடைக்கும் வருமானம், இலண்டன் மாநகரில் ஒருநாளில் கிடைத்துவிடுகிறதே!

இருந்தும் இப்படியான ஒருமுடிவை இவர் ஏன் மேற்கொண்டார்?

இங்குதான் நாம் யோசிக்கவேண்டியுள்ளது.

இலண்டன் மாநகரில் பத்துவருடங்களில் கிடைக்கும் வருமானம், ஸ்ரீலங்காவிடமிருந்து ஒரேமுறையில் இவருக்குக்கிடைத்திருக்கிறது.

இதைத்தவிர வேறெதுவாக இருக்கமுடியும்?
இதனாற்றான், ஸ்ரீலங்காவின் புலனாய்வுப்பிரிவு ஆற்றவேண்டியபணியின் ஒருபகுதியை இவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

ஸ்ரீலங்காவுக்குப் பெரும் சவாலாக இருக்கும் புலம்பெயர் சமூகத்தை, ஈழத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் அவர்களின் உறவுகளிடமிருந்து அன்னியப்படுத்துவதில், மகிந்தாவுடன் கைகோர்க்கமுனைந்திருக்கிறார் என்பது இதன்மூலம் நிரூபணமாகிறதல்லவா?

மகிந்தாவுடன் கைகோர்த்தமையால், இவரை இனிமேல் ‘ சுகிசிவம்’ என்பதைவிட ‘ மகிசிவம்’ என்பதே சாலவும் பொருத்தமானது.

இவ்வகையான, அடுத்துக்கெடுக்கும் தமிழ்ப்பகைவர்களை இனங்கண்டு - புறந்தள்ளி விடுதலைப்பாதையில் முன்னேறுவோம்.

ஏனெனில், நாம் தமிழர்!!!

No comments:

Post a Comment