எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Tuesday, April 20, 2010

டீச்சர்! அவந்தாங் கிள்ளினான் டீச்சர்!


தமிழக அரசியல்வாதிகளா ? இவர்கள் ஒரு தனிரகம் !
இவர்களைவிட இராட்சஷபட்ஷே திறம் என்று சொல்லலாம் போலிருக்கிறது.
இவர்களை அவர்கள் ‘கோமாளிகள்’ என்றார்கள் ; இவர்களும் அதை உண்மையென்று நிரூபிக்கும்வகையிலேயே நடந்துகொள்கிறார்கள்.
அரசியல்வாதிகள் போலவா பேசுகிறார்கள்?
பாலர்பள்ளிக்குழந்தைகள், “ டீச்சர்! இவன் என்னக்கிள்ளினான் டீச்சர்! - இல்ல டீச்சர்! அவந்தா மொதல்ல என்னக்கிள்ளினான் டீச்சர்! “ என்று ஆளுக்காள் குற்றஞ்சாட்டிக்கொள்வதைப்போல,
கருணாநிதிதான் காரணம் என ஒரு சாரார் கைகாட்ட -
ஜெயலலிதாதான் காரணம் என்று மற்றொருசாரார் முழங்க .....

இரண்டையுமே தவிர்த்து, மத்திய அரசே காரணம் என்றும் ஒரு புதுக்காரணம் முளைக்கிறது.

இவைகளையெல்லாம்தாண்டி, ஆங்காங்கே கொசுறுக்காரணங்களும் பிசுபிசுக்கின்றன சுப்பிரமணியன்சாமி போன்ற அசல்கோமாளிகளிடமிருந்து.

இவர்கள் காரணத்தைக்கண்டறிவதற்கிடையில், அந்த வயதானதாய்க்கு , மேலும் வயதாகிவிடும்.
இந்த குதம்பல் அரசியல்வாதிகள்,எதையுமே தமது அரசியல்நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளப்பயன்படுத்திவிடுகிறார்கள்.

மரணவீடுகளில்கூட, தமக்கு அங்கே என்ன தேறும் என்றகணக்கையே போடுகிறார்கள்.

ஆனாலும்,இங்கு, ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவது என்னவோ தமிழன்தான்!!

ஆண்டாண்டுகாலமாகவே அடிமைத்தனம் பழக்கப்பட்டுவிட்டதால், சுதந்திரம் என்ற சொல்லின் பொருளே தமிழனுக்கு, ‘ மானாட உமனாட’ (man ஆட woman ஆட) இரசிப்பதுதான் என்றாகிவிட்டது.

பார்வதியம்மையார் வந்த விடயமே தமக்குதெரியாதாம்;
எவ்வளவு எகத்தாளமான பேச்சு!

கருணாநிதி காட்டில் மழைபெய்கிறது! யார் என்னசெய்யமுடியும்?

எங்கோ உள்ள சச்சின் டெண்டுல்கர் - இவர் சம்பந்தப்பட்ட அரசியல்,தமிழ்க்கவிதை என்று எந்தத்துறையிலுமே இல்லாதவர்;
அவர் இரட்டைச்சதம் அடித்தால் அடுத்தகணமே இவருக்குத்தெரிந்துவிடுகிறது;
அதற்கொரு பாராட்டுக்கவிதையும் பறக்கிறது.

ரம்பா திருமணஞ்செய்தால் அதுவும் தெரிகிறது.

இதுமட்டும்,தெரியவில்லையாம்.

ஒருவேளை , அணிந்திருக்கும் கறுப்புக்கண்ணாடியின் தவறாக இருக்குமோ?

வாசல்வரை வந்த வயதான தாயை விரட்டியடித்துவிட்டு, மீண்டும் தனது இலச்சினை பொறித்து வரவழைக்கப்போகிறாராம் கருணாநிதி!

எதற்குத்தெரியுமா?

வழக்கமானபாணியில் வாய்கிழியப்பேசுவதற்கு.

“ பிரபாகரன் எனது நண்பர் என்று
சொன்னேன் அன்று ;
அதை நிரூபித்துக்காட்டியிருக்கிறேன் இன்று.
அதனால்தான் அவரது தாய்க்கு , தமிழக அரசே முன்னின்று
வழங்கியிருக்கிறது சிகிச்சை ஒன்று.”

அப்படி இப்படி ஏதாவது புலம்பித்தள்ளி ,மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்துவதற்கு.

என்னதான் இவர்கள் ஆட்டங்காட்டினாலும், அடிப்படை உண்மையை மக்கள் உணராமலுமில்லை.

ஆனாலும், திராவிடக்கட்சிகளின் தில்லுமுல்லுஅரசியலில்சிக்கி, சீரழிந்துகொண்டிருப்பதால் , மக்களால் தற்காலிகமாக எதுவும்செய்யமுடியவில்லை என்பதே உண்மை!

ஜனநாயகம் எனும் போர்வையில் , இந்தத்திராவிடக்கட்சிகள் செய்யும் கொடுங்கோல் ஆட்சி, வெகுவிரைவில் முடிவுக்குவரத்தான் போகிறது -

ஈரானின் ஷா, நேபாளத்தின் பிரேந்திரா/கயனேந்திரா, பிலிப்பைன்ஸின் மார்க்கோஸ் போன்ற கொடுங்கோலர்களின் ஆட்சி மக்களாலேயே தூக்கியெறியப் பட்டதுபோல

No comments:

Post a Comment