|
Thursday, April 7, 2011
யானை பார்த்ததுபோல் ‘ புலி ‘ யைப்பார்த்தவர்கள் - பாகம் 1
Wednesday, February 23, 2011
ஈழத்துத்தும்மல் - எச்சரிக்கை தமிழா! எச்சரிக்கை!
சினிமாவிலிருந்து ஒரு புதிய பூதம் கிளம்பியிருக்கிறது அரசியலுக்கு- பஞ்ச் டயலாக் உடன்.
தமிழனுக்கு விழும் ஒவ்வொரு அடியையும் தன்மீது விழுந்த அடியாக நினைத்துப்போராடுவாராம் -
அண்மைக்காலம்வரை தமிழனுக்குத்தலைவலியாகவும், சினிமாவில் தளபதியாகவும் இருந்த நடிகர் விஜய்.
அவரது டயலாக் இன்படி இதுவரை தமிழன் அடிவாங்கிக்கொண்டேயிருக்கிறானே!
இவர் முதுகில் எத்தனை ’தமிழ்த்தழும்புகள்’ வைத்திருக்கிறார்?
ஈழத்தில் தமிழன் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டானே! அப்படிப்பார்த்தால், இவர் ஏழேழு தலைமுறைக்கும் உயிருடனேயே இருக்கக்கூடாதே!
இவ்வளவுக்குப்பிறகும், காங்கிரஸ் கட்சியிலேயே முக்கியபதவியைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தவர்தானே இவர்?
அதுவுமல்லாமல்,” ராகுலை ஏன் சந்தித்தீர்கள்?” என்ற நிருபர்களின் கேள்விக்கு, ராகுலின் கொள்கைகள் தனக்குப்பிடிக்கும் என்றும் , அதனாலேயே தாம் ராகுலைச்சந்தித்ததாகவும் ,திமிரோடு பதிலளித்தவர்தானே இந்த நடிகர் விஜய்?
ஈழத்தமிழர்களை ஒழித்துக்கட்டுவதையே தமது முக்கிய கொள்கையாகக்கொண்ட ராகுலைப்பிடிக்கும் என்றால் அதன் அர்த்தம்தான் என்ன?
தமிழனை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்துக்கட்டுவது எனும் கொள்கை இவருக்குப்பிடித்திருக்கிறது என்றுதானே கொள்ளவேண்டும்?
இது வேறொன்றுமில்லை...
பெயரிடப்படாத விஜய் படத்துக்காக யாரோ எழுதிய வசனம். அந்த வசனத்தைப்பிரபலமாக்கி- பின்பு அதன்மூலம் படத்தைப்பிரபலமாக்கும் உத்தி இது.
ஈழத்தில் ஒருவன் தும்மினாலும்,அதை’ஈழத்துத்தும்மல்’ என்று பெயரிட்டு அதைப்பத்துமடங்கு பூதாகரமாக்கிப் பணம் பண்ணுவதைத்தவிர , உருப்படியாக என்னத்தைக் கிழித்துவிட்டார்கள் இவர்கள்?
கேவலம்,...அசின், அசித் திமிரையே அடக்கமுடியல - ஆ!...தவறு... விரும்பல.
குறைந்தபட்சமாக, திரையுலகிலிருந்து அவ்வப்போது நொதித்துச்சிதறும் நாற்றங்களை மறைக்கக்கூட முடியல.
தமிழைக் காப்பாத்தப்போறாராம் தமிழை.
முதல்ல, திரையுலக நாற்றத்திலிருந்து தமிழைக் காப்பாத்தட்டும்! தமிழ் தானாகவே வாழும்!
தமிழா! நீ எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம் இது!
மீண்டும் மீண்டும் சகதியிலேயே போய் விழுந்துகொண்டிருக்காமல் -
தற்காலிக சுகங்களையே பெரிதென மதிக்காமல் -
நீண்ட தொலைநோக்குப்பார்வையுடன் வாக்களித்து, எமது எதிர்காலச்சந்ததியாவது-- சிவம் அமுதசிவம்
Friday, February 11, 2011
சுபவீ / மனநோய்
Sunday, December 26, 2010
பொள்ளாச்சி நசன் ஐயாவின் இடைவிடாத தமிழ்ப்பணி
அன்புடையீர் வணக்கம்
thamizham - கல்விக்கான நேரடிப் பகிர்வு
http://www.livestream.com/thamizham
மேற்காணும் இணைப்பின் வழியாக நேரடியாக தமிழ்க் கல்வி பற்றிய
செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஒவ்வொரு காரிக் கிழமையும் இந்தப் பகிர்வை நிகழ்த்த விரும்புகிறேன்.
தமிழ்க் கல்வி தொடர்பாக உங்களின் வினாக்கள்
உங்கள் தமிழ்ப் பள்ளிக்குத் தேவையான கருவிகள், பாடத்திட்டங்கள்
மாணவர்களுக்கான பிரச்சனைகள் அதைச் சரி செய்ய கருததுருக்கள்
மாணவர்கள் ஆற்றலோடு எழுவதற்கான படிநிலைகள்
இன்றைய பாடத்திட்டம் - அதன் குறைகள் எப்படி சரிசெய்து
நிறைவாக்கி எதிர்கால நாற்றுகளான மாணவர்களை எப்படி
வளர்த்தெடுப்பது என்பதற்கான வழி முறைகள்
இதுபோன்ற கல்வி தொடர்பான செய்திகளை வரிசைப் படுத்தி
உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நேரம் தமிழக நேரப்படி இரவு 7.30 முதல் 8.00 வரை
ஒவ்வொரு காரிக் கிழமைகளிலும் (சனிக்கிழமைகளிலும்)
நிகழ்த்த விரும்புகிறேன். முதல் பகிர்வினை
04- 01 - 2011 அன்று தொடங்கத் திட்டமிட்டுள்ளேன்
உலகம் முழுவதும் உள்ள தமிழ் கற்பிக்கும் பள்ளிகள்
இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறேன்
உங்களுக்கான பிரச்சனைகளை மின் அஞ்சல் வழி அனுப்பி
வைத்தால் அதற்கான தீர்வும், அணுகுமுறையும் இந்த நேரத்தில்
பகிர்ந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.
இந்த நிகழ்வு பற்றிய உங்களது ஆலோசனைகளையும், கருத்துகளையும்
மின் அஞ்சல் செய்யுமாறு வேண்டுகிறேன்.
அன்புடன்
பொள்ளாச்சி நசன்
ம.நடேசன்,., க.மு., அறி.மு., கல்வி.மு., தொ.தூ,க.,
மின் அஞ்சல் - pollachinasan@gmail.com - pollachinasan@yahoo.com
Monday, December 20, 2010
Sunday, July 4, 2010
குறைந்தபட்ச ஆறு வித்தியாசங்கள்
Wednesday, June 16, 2010
நீதியின்பால் இக்பால்
இவர் இலங்கையின் சிவில் நிர்வாக அதிகாரியாக 40 வருடங்கள் பணியாற்றியவர். முன்னாள் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் வெளிவிவகார சேவையில் பணியாற்றியவர். மேல்மாகாண சபையின் ஆளுநர் சர்வானந்தாவின் செயலாளராக_ முன்னாள் ஜனாதிபதி அமைத்த காணாமல் போனோர் தொடர்பான ஆணைக் குழுவின் செயலாளராக _ பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நியமித்த நிபுணத்துவ ஆணைக்குழுவின் ஆலோசகராகவும் பணியாற்றியவர். இப்போது எழுத்தாளராகவும், ஆய்வாளராகவும் இலங்கையின் உள்நாட்டுமுரண்பாடுகள் குறித்து எழுதியும் வருகிறார்.
இவ்வளவு அனுபவம் கொண்டவரிடம் எப்படி வாலாட்டமுடியும்?
எல்லாவற்றிற்கும் மேலாக யாழ்ப்பாணத்தில் பிறந்து, யாழ் இந்துக் கல்லூரியில் கற்று, பல்கலைக்கழகம் சென்றஒரு யாழ் முஸ்லீம் என தன்னைக் கூறிக்கொள்வதில் பெருமை கொள்பவர் இந்த இக்பால்.
இலங்கையின் சார்பில் அழைக்கப்பட்ட ஏனையஊடகவியலாளர்களான சுனந்த தேசப்பிரிய, நடராஜா குருபரன், ராதிகா தேவகுமார் ஆகியோரும் தமது கருத்துக்களைத்தெளிவாகவே வலியுறுத்தியிருந்தனர்.
ஆயினும், ஒரு முஸ்லிமாக இருந்தும் நீதியின்பால் நின்ற இக்பால் வாழ்க!!