எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Friday, May 4, 2012

 முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாகக்

கொலையுண்ட எமது உறவுகளுக்கான

 சிறப்புப் பதிவு.


முள்ளிவாய்க்கால்தானா முடிவாகிப்போகும் போடா! 

பாடல் இடம்பெற்றுள்ள குறுவட்டு : தாய்பிறந்த மண்

அடடா! தமிழா! தமிழா! தமிழா!
அடடா! தமிழா! தமிழா! தமிழா!

முள்ளிவாய்க்கால்தானா
முடிவாகிப்போகும் போடா! 

எத்தனை முறைதான் கடல் கொண்டது;
எத்தனை முறைதான்  இடர் தந்தது ;
அத்தனை முறையும் தமிழ் வென்றது
அடடா! வா தமிழா!
முள்ளிவாய்க்கால்தானா
முடிவாகிப்போகும் போடா! 

எழுஎழு விரைவினில் தரணியில் தமிழதன்
இழிநிலை துடைத்திடுவோம் வா!
தமிழா! தமிழா! தமிழா!தமிழா! 
புயலொடு பொருதிடு பகைவரின் படையதில்
முடிவுரை எழுதிடு வாடா!

                                             - நம் - 
உறவுகள் அங்கே ஆயிரம்
மாண்டனர் அன்றோ ஆயினும் - நீ
மீண்டும் எழுந்தொரு தீயில் இறங்கிடு
நம்பிக்கை ஒன்றே ஆயுதம்
தமிழா! தமிழா! தமிழா!தமிழா! 
முள்ளிவாய்க்கால்தானா
முடிவாகிப்போகும் போடா! 

எங்கள் மண்ணின் மடி தொட்டவன் - எமை
அங்கு நின்றபடி சுட்டவன் - ஒரு
ஆறடி மண்ணும் சொந்தமின்றி இனி
அழிந்துபோகத் தக்கவன்.
தமிழா! தமிழா! தமிழா!தமிழா! 
முள்ளிவாய்க்கால்தானா
முடிவாகிப்போகும் போடா! 
                                             ஆக்கம் : சிவம் அமுதசிவம் 

No comments:

Post a Comment