எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Thursday, May 27, 2010

ஏக்க தமாய் கோகணா!

அடடா! என்ன அருமையான கண்டுபிடிப்பு!

ஸ்ரீலங்காவினால், ஐ.நா.வுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் பாலித்தா கோகணா என்பவர், அண்மையில் தாம் வெறும் தூதுவர்தான் என்பதை மறந்து, ஏதோஉலகம் முழுவதுமே தன்சட்டைப்பையில் என்பதுபோலப் பேசியிருக்கிறார்.
ஏற்கெனவே , மலையாளி என்ற காரணத்தால் இவர்களிடம் விலைபோன விஜய் நம்பியார் என்பவரைவைத்து, பான்கீமூனையும் விலைக்குவாங்கியிருந்தார்கள் என்பது உண்மையே!

ஆனாலும், இவர்களனைவரையும் மீறி, பீறிட்டுக்கசிந்த உண்மைகளால், அதிலும் குறிப்பாக பிரித்தானியாவின் , ‘சனல் 4’ தொலைக்காட்சியில் வெளியான படுகொலைக்காணொலிகளால், இக்கட்டுக்குள்ளாகியிருக்கும் , ஐ.நா.செயலர் பான்கி மூன் , அப்படுகொலைகளையும் ஸ்ரீலங்காவின் போர்க்குற்றம் தொடர்பாகவும் ஒரு விசாரணைக்கமிசன் அமைப்பதற்காக, தமக்கு ஒரு ஆலோசனைக்குழுவை அமைக்கப்போவதாகக் கூறிவருகிறார்.

இங்கே நாம் கவனிக்கவேண்டியது, பான்கிமூன் அவர்கள் , ‘ இதோ வருகிறது !! இதோ வருகிறது !! ’ என்று விளம்பரம் செய்வது விசாரணைக்கமிசன் அமைப்பதற்காக அல்ல..
மாறாக, அதற்கான ஆலோசனைக்குழுவை அமைக்கப்போவதாகத்தான் அவ்வப்போது முழங்கிக்கொண்டிருக்கிறார்.
இதற்கான உண்மையான காரணம், ‘ நான் அப்படி இப்படி ஏதாவது சொல்லிக்காலத்தை இழுத்தடிக்கிறேன்... அதற்குள் நீ ஏதாவது செய்யமுடிந்தால் செய்! ‘ என்று ஸ்ரீலங்காவுக்கு சமிக்ஞை கொடுக்கிறார்.அதாவது, அவர்களீடம் விலைபோனமையிலிருந்து விடுபடமுடியாமற்தவிக்கிறார்.

ஸ்ரீலங்காவும், இவரது நிகழ்ச்சிநிரலுக்கேற்ப, தனக்குத்தானே ஒரு விசாரணக்கமிசன் ஒன்றை அமைக்கப்போவதாக அறிவித்திருந்தது; அதன்படி ஒரு கண்துடைப்புக்கமிசன் ஒன்றையும் அமைத்தது.
இப்போது, இந்த அஸ்திரத்துடன்தான் களமிறங்கியிருக்கிறார் இந்த
பாலிதா கோகணா என்பவர்.
தம்மிடம் ஏற்கெனவே ஒரு கமிசன் உள்ளதாம்; எனவே இனி ஐ.நா.வினது வருவது பொருத்தமற்றதாம்.
அதற்கு அவர் சொல்லும் காரணம், ‘ போரில் தோற்றபுலிகள், மக்கள் சக்தியுடன் வென்றுவிடுவார்களாம்’.
அதாவது, அவர் சொல்லவருவது, ஐ.நா. ஒரு கமிசனை அமைத்தால் , தாம் ஏற்கெனவே அமைத்திருக்கும் ,’கள்ளங்கபடமற்ற - தூய்மையான கமிசனின் புனிதம் கெட்டுவிடும் என்பதுபோல.
அல்லது, விடுதலை உணர்வுடனிருந்தவர்களைத்தான் புதைத்துவிட்டோமே! ; ஏனையோரை முட்கம்பி வேலிக்குள்வைத்து, ஆளைவிட்டால்போதும் என்னுமளவுக்கு வதைத்துவிட்டோம் ; இக்கமிசன் ஒருவேளை வந்துவிட்டால்.......? அஃதும் ஒருவேளை நீதியின்பக்கம்நின்றுவிட்டால்...? இவர்களுக்கெல்லாம் விடுதலையுணர்வு துளிர்விட்டுவிடுமோ என்று அச்சம் ; அவ்வளவுதான்.

ஏற்கெனவே இவ்வுலகில், இனப்படுகொலை செய்தமைக்காக, பலநாடுகள் தண்டிக்கப்பட்டிருக்கின்றன ; ஜேர்மனியின் ஹிட்லர் மற்றும் யூகோஸ்லாவியாவின் சுலொபொடோன் மிலோசொவிச் போன்ற பல உலகத்தலைவர்கள் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஹிட்லரோ இறந்தபின்னர்கூட , இன்றுவரை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டுக்கொண்டேயிருக்கிறான்.

இவர்களுக்கெல்லாம்,பாலிதா கோகணாவின் இந்த மந்திரம் தெரிந்திருந்தால் தண்டனையிலிருந்து தப்பித்திருக்கலாமே!
ஹிட்லர் ஏனைய நாடுகளுக்கெல்லாம் சொல்லியிருக்கலாம் : “ உங்கள் நாடுகளை ஜேர்மானியப்படைகள் தாக்கியமைக்குத்தண்டனையாக, ஜேர்மனியில் நாமே நமக்கு, குண்டுகளைப்போட்டுக்கொள்கிறோம்” என்று.
இதேபோல, பொஸ்னியாவில் தாம் நிகழ்த்திய அட்டூழியங்களுக்காக, “சேர்பியாவில் ஆங்காங்கே விசாரணைக்கமிசன்களை நாமே நடாத்திக்கொள்கிறோம்” என்று சுலொபொடான் மிலோசொவிச் சொல்லியிருக்கலாம்.
இவர்களுக்கெல்லாம் தெரிந்திராத ஒருவிடயம், கோகணாவுக்குத் தெரிந்திருக்கிறது.
இவர் கிறிஸ்துவுக்கு முன்பே பிறந்திருந்தால், இந்தச் சர்வாதிகாரிகளெல்லாம், ஆபிரகாம் லிங்கன், ஜோண் எஃவ் கென்னடி வரிசையில் வைத்துப்போற்றப்பட்டிருப்பார்களோ என்னமோ...
இன்றையநிலையில், சிங்களமானது - தன் கழுத்துக்குநேரே கத்திதொங்குவதை நன்கு உணர்ந்துகொண்டுள்ளது என்பதுமட்டும் உண்மை.

இதனாற்றான், கிலிபிடித்தநிலையில் ஆங்காங்கே மகிந்தா தொடங்கி , பீரிஸ் , அழகப்பெருமா என்று அனைவரும் ஆளுக்கொருதிக்கில்போய், அழாதகுறையாக வாயில்வந்ததையெல்லாம் பிதற்றுகின்றனர்.
எனினும், இவையெல்லாவற்றையும்விட , ஐ.நா.வுக்கே தூதுவர் என்றவகையில், கோகணாவின் உளறலே இதில் முதலிடம்பெறுகிறது.

ஏக்க தமாய் கோகணா!!!
ஒபகே சிந்தனாவ, சூப்பர் கல்பனாவ!!!!!!

No comments:

Post a Comment