எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Friday, May 14, 2010

ஓ! மனிதா!..... ( ஒரு தமிழகத்தமிழனின் உணர்வலைகள்!)

ஓ மனிதா....

உண்மைதான் என்ன?

உரிமையிழந்த எங்கள் உயிர்

இருந்துதான் என்ன?

ஓலமிட்டோம் உலகறிய

உறவுகளின் கை ஒடிந்தபோது...

ஒன்றும் அறியாதவனாய்

உன்னில் எத்தனை பேர்...?

ஓலமிட்டோம் உலகறிய

உறவுகளின் உயிர்போகிறதென்று...

ஒன்றும் அறியாதவனாய்

உன்னில் எத்தனை பேர்...?

வல்லரசுகளாய் வாய் பொத்தி..

அகிம்சை தேசத்தானே ஆயுதப்பொதிகளாய்...

ஊடகக் காரனே ஊமைகளாய்....

மெளனித்த மனித உரிமைக்காரனாய்..

இன்னும் இன்னும் எத்தனை எத்தனை...?

முடிவில் மடிந்தே போயினர்

எம் கையில் வீரத்தமிழன்

என்ற முகவரியைத் தந்து....

ஓ மனிதா....

இதுதான் அந்த உண்மையா...?

எஙகள் முகவரி தமிழன்

அதுதானே...

ஆறாயிரம் ஆண்டுகளாய்

சூடிக்கொண்டிருக்கிறோம்....

இழக்கமாட்டோம் இனியும்.....

முள்ளிவாய்க்காலில்

இரத்தத்தாலும் உறுதியாக

எழுதப்பட்டு இருக்கிறது......

உலகமே!

நீங்கள் எங்களை

அழிக்க அழிக்க எழுதுவோம்....

நங்கள் தமிழரென்று...

எழுவோம்....எழுவோம்.....

இன்னும் இன்னும் பன்மடங்காய்....

தோழர் சிவா - துபாயிலிருந்து

No comments:

Post a Comment