எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Wednesday, March 24, 2010

தன்மானம் ஒழிய பார்க்கிறோம் மானாட மயிலாட ....

தீப்பிழம்புக்கவிஞன் பகலவன் கவிதை.

தமிழ் வாழ்கிறது

தமிழ் நாடு அழிய...
இவன் வாழ்கிறான்
தமிழினம் அழிய...

மாநாடு நடத்துகிறானாம்
தமிழை அழிக்க....
கொடநாடு போகிறாளாம்
கன்னடத்து அம்மா.

இனம் அழிய பார்த்தோம்
அரசியல் நாடகத்தை...
தன்மானம் ஒழிய பார்க்கிறோம்
மானாட மயிலாட .

மாநாடு வேண்டுமாம்
செம்மொழி தமிழ் வாழ...
திராவிடம் வேண்டுமாம்
இவன் பரம்பரை வாழ.

பாரத ரத்னா வேண்டுமாம்
இவன் துரோகங்கள்வாழ...
இலவசம், மயக்கம்கொடுப்பானாம்,
தமிழன் சோம்பேறியாய்வாழ.

தமிழைத்தேடுகிறேன்
செம்மொழி- தமிழைத் தேடுகிறேன்!
தமிழனைத்தேடுகிறேன்,
தன்மானத்தமிழனைத் தேடுகிறேன்,

கட்சிக்குச் சொந்தக்காரன்
பாதித்தமிழன் !
சாதிக்குச்சொந்தக்காரன்
மீதித்தமிழன்.

அகர முதல எழுத்தெல்லாம்
தமிழனின் வாழ்வேடு ;
அதைப் புரிந்துகொள்ளாதவரை
நீதான் தமிழனே ! தமிழுக்குச்சாபக்கேடு.

தமிழனின் துரோகத்தின்
பட்டியல் நீண்டுபோக...
தமிழனின் வீரத்தின்பட்டியல்
குருடாகிப்போனது.

தமிழ் வாழ்கிறதாம்
முல்லையில் அரசியல்விளையாட !
தமிழ் நடனம்ஆடுகிறதாம்

டாஸ்மாக்கில் குடிகாரத்தமிழன்ஆட.

தமிழ் வாழ்கிறதாம்,
பாலாற்றில் தெலுங்கன் மணலைஅள்ள !
தமிழனம் ஒளிர்கிறதாம்,
தமிழன் அகதியாய் உலகம் திரிய.

வந்தாரை வாழவைத்தானாம்,
வந்தவனெல்லாம் ஏறிமிதிக்க !
இந்தியஅன்னையை வாழ்த்துகிறானாம்,
தமிழகமீனவனை ஏறிநசுக்க.

ஆம்! எங்கும் தமிழ்நாடுவாழ்கிறது,
தமிழ் அழிய ....
இவன் வாழ்கிறான்,
தமிழினம் அழிய !!!


....பகலவன்....

1 comment:

  1. wow! a correct tittle - theeppizhambu.
    Really the every word of this poem is like a -fire flame.

    ReplyDelete