எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Friday, March 26, 2010

2007 Jharghand

2007 ம் ஆண்டு , காந்தி?தேசத்தில் நிகழ்ந்த ஒரு குரூரம்!!



இதுதான் இந்தியா ! இதற்குக் காந்திதேசம் என்று அடைமொழிவேறு! இந்தக்காட்சியை இதில் பார்த்துக்கொண்டிக்கும்போதே எமது நெஞ்சுகனக்கிறது; துக்கம் தொண்டையை அடைக்கிறது. ஆனால், எவ்வளவுநிதானமாக-பட்டப்பகலில்-நட்டநடுத் தெருவில் இந்த அட்டூழியம்நடக்கிறது! ஒருஅப்பாவியைப் பலர்சேர்ந்து,விதவிதமாகத் தாக்குகிறார்கள்; அதை எத்தனைபேர் சுற்றிநின்று வேடிக்கைபார்க்கிறார்கள் ! இந்த வேடிக்கைபார்க்கும் கும்பலில் காவலர்களும்உள்ளடக்கம் என்பதுதான் இதன்முக்கியஅம்சமே! தாக்குதலுக்குள்ளானவர்கள் எந்தவிதமான எதிர்ப்பையும் காட்டாதநிலையிலும் - வெறும் மண்புழுக்களாக நெளிந்துகொண்டிருந்த நிலையிலும், கொஞ்சங்கூட ஈவிரக்கமின்றித் தாக்குதல் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.
இத்தனைக்கும் அவ்விளைஞர்கள்செய்த தவறுதான்என்ன?
சனநாயகவழியில் தமது உரிமைகளுக்காகப் போராடியதுதான் அவர்கள்செய்த மாபெரும்தவறு.
இதில் கவனிக்கப்படவேண்டியது என்னவெனில், இன்னொருகும்பல், அங்கே மனுக்கொடுக்கவந்த ஆதிவாசிஇளம்பெண்களைத் துரத்திதுரத்தி வேட்டையாடுகிறது. இதுதான்தருணம் என்று அவர்களை நிர்வாணமாக்கிப்பார்க்கிறது.
நட்டநடுத்தெருவில் அந்தஅப்பாவி இளம்பெண் , தனது மானத்தையும் உயிரையும்காக்க, நிர்வாணமாக ஓடிக்கொண்டிருக்கிறாள். இன்னொருபெண்ணை ஒரு காடையன், நிர்வாணமாக்கி, அவளின் பிறப்புறுப்பில் தனது காலணிக்காலால் உதைகிறான்.
எவ்வளவு வக்கிரபுத்தி?
இதை அங்கு கடமையிலிருந்த பெண்காவலர்கூட ’பொண்ணுக்குப்பொண்ணு‘ என்றவகையிலாவது தடுக்கமுன்வரவில்லை. கூட்டத்தோடு கூட்டமாகநின்று வேடிக்கைதான் பார்க்கிறார். அவர்மட்டுமா ? முழுஇந்தியாவுமே இவ்வகையான அக்கிரமங்களை வேடிக்கைதான்பார்க்கிறது - பார்த்துக்கொண்டேயிருக்கிறது.
எல்லைதாண்டிய பயங்கரவாதமாம் ! அதை அடியோடு ஒழிக்கப்போகிறார்களாம்! பீற்றிக்கொள்கிறார்கள். இவர்களின் எல்லைக்குள்நின்றுகொண்டே பயங்கரவாதம் எல்லைதாண்டிப்போகிறதே!

No comments:

Post a Comment